- முன்னாள்
- பீகார்
- முதல் அமைச்சர்
- அமித் ஷா
- புது தில்லி
- ஜிதன்ராம் மாஞ்சி
- மத்திய உள்துறை அமைச்சர்
- தின மலர்
புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முன்னாள் பீகார் முதல்வர் ஜித்தன்ராம் மான்ஜி திடீரென சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசில் ஜித்தன் ராம் மான்ஜியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி இடம் பெற்றுள்ளது. பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக முதல்வர் நிதிஷ்குமார் டெல்லிக்கு வந்துள்ளார்.அவர் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில்,ஜித்தன் ராம் மான்ஜி நேற்று டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்த ஜித்தன் ராம் உடனடியாக நிதிஷ்குமாரை சந்தித்தார். பின்னர் அவர் கூறுகையில்,‘‘பிரதமராவதற்கு நிதிஷ்குமாருக்கு எல்லா தகுதிகளும் உள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உண்மையான முயற்சிகளை எடுத்து வருகிறார். நான் எப்போதும் அவரது பக்கம்தான் இருப்பேன்’’ என்றார்.
The post அமித் ஷாவுடன் மாஜி பீகார் முதல்வர் சந்திப்பு appeared first on Dinakaran.